கடந்த 2013ல் விமானம் மூலம் இலங்கையில் இருந்து இந்தியா வந்த விஜிதா, தமிழ்நாட்டில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கி இருந்துள்ளார். விஜிதாவின் பாஸ்போர்ட் விசா காலாவதியானதால், சொந்த நாட்டிற்கு படகில் செல்ல ஏஜன்ட்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏஜன்ட்களாக செயல்பட்ட தங்கச்சிமடத்தை சேர்ந்த அருளானந்தம்(39), அவரது 17 வயது மகன் ஆகிய இருவரையும் துறைமுக போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். முக்கிய புள்ளியாக செயல்பட்ட படகின் உரிமையாளர் ஜேசு(35)வை தேடி வருகின்றனர்.
The post ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பி செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.