ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடல் தண்ணீர் திடீரென்று உள்வாங்கியதால் மீனவர்கள் நிறுத்தியிருந்த படகுகள் தரை தட்டி நிற்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாகவும் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் கடல்வள ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.