ராகுல் காந்தியை வயநாடு தக்க வைத்து கொண்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: வயநாடு ராகுல் காந்தியை தக்க வைத்துக் கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு: நீதி வென்றது! வயநாடு ராகுல் காந்தியை தக்கவைத்துக் கொண்டது! அவதூறு வழக்கில் சகோதரர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கும் மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இந்த உத்தரவு நமது நீதித்துறையின் வலிமை மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும், மக்களாட்சியின் மாண்புகளை காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ராகுல் காந்தியை வயநாடு தக்க வைத்து கொண்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: