கடந்த சில நாள்களுக்கு முன்னதாக அன்சுமான் சிங்குக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருது வழங்கிய நிலையில், ராகுல்காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். முன்னதாக ராகுல் காந்தி சென்ற விமானம், ஃபர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக லக்னோவில் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ரேபரேலி சென்றார். நேற்று அசாம் மற்றும் மணிப்பூர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இன்று தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் மக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.
The post தேர்தல் வெற்றிக்கு பின் முதன்முறையாக ராகுல்காந்தி ரேபரேலி பயணம்: வீரமரணமடைந்த வீரர் குடும்பத்துக்கு ஆறுதல் appeared first on Dinakaran.