சென்னை: தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரியில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.