பின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: முதல்வர் தரப்பில் இருந்து 10 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த மசோதாக்கள் மீதான பதில்கள் இன்னும் வரவில்லை. நிச்சயமாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில், நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால், நாங்கள் மீண்டும் அவருக்கு அனுப்பும் போது அதற்கு அனுமதி தர வேண்டும் என குறிப்பிட்டு உள்ளோம். எனவே மசோதாக்களை 2வது முறை மறுப்பதற்கு வாய்ப்பு கிடையாது. மேலும் பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள கருத்தை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். மசோதாக்களை இரண்டாவது முறை மறுப்பதற்கு வாய்ப்பு கிடையாது.
The post பஞ்சாப் வழக்கை மேற்கோள் காட்டி வாதாட திட்டம் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் வரும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.