இதனிடையே தேஜ கூட்டணிக்குள் உரசல் நீடித்து வரும் நிலையில், சட்டசபை கூட்டம் தொடங்கும் முதல்நாளில் இருந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பதை சபை ெதாடங்கியதும் சபையின் அலுவல் குழு கூடி முடிவெடுத்து அறிவிக்க உள்ளது. அதாவது தொடர்ந்து 2 வாரங்கள் சட்டசபையை நடத்த திட்டமுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கவர்னர் உரையை முடித்துவிட்டு புதுவையிலிருந்து சி.பி ராதாகிருஷ்ணன் விடைபெறும் நிலையில், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் வருகிற 2ம்தேதி மாலை முறைப்படி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது! appeared first on Dinakaran.