இதை கேட்ட தலைமை நீதிபதி, விதிமீறல்களுக்கு எதிராக ஆர்டிஓ தான் விசாரணை கோர முடியும் என்று தெரிவித்தார். இதையடுத்து, மனுவில் கோரிக்கையை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள, இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்களை பயன்படுத்துவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.