மோடி அவர்களே! உங்கள் விருப்பப்படி எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்; நாங்கள் INDIA தான்: ராகுல் காந்தி பதிலடி

டெல்லி: மோடி அவர்களே! உங்கள் விருப்பப்படி எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்; நாங்கள் INDIA தான் என்று ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். I.N.D.I.A. என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் குறித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

அச்சமயம் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி என்ற பெயரிலும் INDIA என்ற பெயர் இருந்தது. இதுபோன்ற திசையற்ற ஒரு எதிர்க்கட்சிகளை இதுவரை கண்டதே இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், INDIA கூட்டணியை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் மோடி;

நாங்கள் இந்தியா கூட்டணிதான்;

மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவவும், ஆறுதல் படுத்தவும், அவர்களின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் இருக்கிறோம்;

மணிப்பூர் மக்கள் மத்தியில் அன்பு மற்றும் அமைதியை மீண்டும் கொண்டு வர எதிர்க்கட்சிகள் பாடுபடும் ;

இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவோம்”

மணிப்பூரில் இந்தியா என்ற கருத்தியலை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் உழைக்கும் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

The post மோடி அவர்களே! உங்கள் விருப்பப்படி எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்; நாங்கள் INDIA தான்: ராகுல் காந்தி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: