இட ஒதுக்கீடு, சமூகநீதி பற்றி பிரதமர் பேசலாமா?: கி.வீரமணி கேள்வி!

சென்னை: இட ஒதுக்கீடு, சமூகநீதி பற்றி பிரதமர் பேசலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தானே இட ஒதுக்கீடு என்றுள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3 பேர் தானே ஓ.பி.சி.?. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்? சமூக நீதி என்றால் இதுவா? பதில் கூறட்டும், மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

 

The post இட ஒதுக்கீடு, சமூகநீதி பற்றி பிரதமர் பேசலாமா?: கி.வீரமணி கேள்வி! appeared first on Dinakaran.

Related Stories: