இந்த நிலையில், திருச்சி மாவட்ட பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று அளித்த பேட்டி: தக்காளி விவசாயிகள் படும்பாடு அதிகம். எனவே 40 ரூபாய்க்கு கீழே தக்காளி விலை குறைந்தால் அரசே அதனை வாங்கும் என்று முடிவு எடுக்க வேண்டும். நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலையை குறைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. ஏற்றமும் இறக்கமும் வாடிக்கையான ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார். தக்காளி விலையை குறைக்க ஒன்றிய பாஜ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தக்காளி வாங்காதீங்க, விலை குறையும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
The post விலையை குறைக்க என்ன ஒரு ஐடியா! 4 நாளு தக்காளி வாங்காதீங்க… மக்களுக்கு எச்.ராஜா அட்வைஸ் appeared first on Dinakaran.