பாலிடெக்னிக் சேர்க்கை தேதி நீட்டிப்பு

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான தேதியை நீட்டித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில் நுட்பக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024-25ம் கல்வி ஆண்டின் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, முதலாண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் நடக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) மாணவர் சேர்க்கை அளவை அதிகரிக்கும் வகையிலும், துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி நலன் கருதியும் அவர்களுக்கு பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைப் பொது தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாண்டு, பகுதி நேரப் பட்டயப் படிப்புகளில் சேர்க்க வசதியாக மாணவர் சேர்க்கை தேதியை வரும் 14ம் தேதி வரை நீட்டித்து அனுமதி வழங்கப்படுகிறது.

The post பாலிடெக்னிக் சேர்க்கை தேதி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: