வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் கல்யாணி. ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் மேல் மாடியில் மனைவி, மகள், மகனுடன் வசித்து வருகிறார். கீழ் வீட்டினை இதே ஊரை சேர்ந்த கான்ட்ராக்டர் கர்ணனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் கல்யாணி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இ பயங்கர சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். வீட்டின் முன்புறத்தில் இருந்த சுவிட்ச் பாக்ஸ் தீப்பிடித்து எரிந்துள்ளது. தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். தகவலறிந்து பட்டிவீரன்பட்டி போலீசார் வந்து சிசிடிவி கேமரா பதிவை பார்த்தனர். அதில் 3 பேர் பாட்டிலுடன் தெருவில் நடந்து செல்வதும், பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டில் தீப்பிழம்புகள் வருவதும் பதிவாகி உள்ளது. அந்த காட்சியை வைத்து மூவரையும் தேடுகின்றனர்.

The post வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: