குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், குற்றம் நடைபெற்ற பங்களாவை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஜித்தின்ஜாய் மனு அளித்தார். அந்த மனுவுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி அரசு தரப்பு வக்கீல்களிடம் நீதிபதி முரளிதரன் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2023ல் சதீஷன், தீபு, சந்தோஷ் சாமி ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜித்தின்ஜாய் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கொலை, கொள்ளை வழக்கு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய மீண்டும் கோர்ட்டில் மனு: ஜூலை 18க்கு விசாரணை ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.
