20 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தவும், 1,972.17 ஏக்கர் அரசு நிலத்தை டிட்கோவுக்கு ஒப்படைக்கவும் அரசுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் முன்மொழிவை அனுப்பினார். அதில் 1,085.62 ஏக்கர் நிலம் நஞ்செய் நிலமாக உள்ளன. இவற்றையும் ஆர்ஜிதம் செய்வதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மிகவும் அதிக அளவில் நில ஆர்ஜிதம் நடைபெறுவதால், கூடுதல் பணியாளர்களையும், சிறப்பு அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும், வாடகை வாகன வசதிகள் செய்து தர வேண்டும் என்று அரசுக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார்.
மேலும் இதற்கு ஒரு ஆண்டுக்கான செலவாக ரூ.19.25 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து, அவர் கேட்டுக் கொண்டபடி 2 ஆண்டுகளுக்கு தேவையான 326 தற்காலிக சிறப்பு பணியிடங்களுக்கான அனுமதியையும், ரூ.19.25 கோடி நிதியை அனுமதித்தும் அரசு உத்தரவிடுகிறது. அதுபோல, 5,746.18 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில்களுக்கான நில ஆர்ஜித சட்டத்தின்படியோ அல்லது தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலமாகவோ ஆர்ஜிதம் செய்வதற்கான அனுமதியை அளித்து அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பரந்தூர் விமான நிலையத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் 5,746 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.