ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் வெண்ணிலா, பெரியபாளையம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் அலுவலர் கணேஷ் கலந்து கொண்டு, நமது இலக்கு 100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி மொழியை வாசித்தார். பின்னர், பெரியபாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே இருந்து மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பெரியபாளையம் வருவாய் ஆய்வாளர் கீதா, ராள்ளபாடி விஏஓ சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் இயக்குனர் எபினேசர் நன்றி கூறினார்.
The post பெரியபாளையம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.