சி.எஸ்.கே அணி நிர்வாகத்திடம் தோனிக்கு பதில் தன்னை சென்னை அணி கேப்டனாக்குமாறு ஓபிஎஸ் சண்டை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் டிவிட்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளை காண ரசிகர்கள் மட்டுமின்றி, நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வருகின்றனர். அந்தவகையில், கடந்த 6ம் தேதி நடந்த சென்னை அணி மற்றும் மும்பை அணி இடையேயான போட்டியை காண்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.

இந்த புகைப்படத்தை டிவிட்டரில் டேக் செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக ஒரு பதிவை டிவிட் செய்துள்ளார். ஓபிஎஸ் படத்தை டேக் செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிவிட்டர் பதிவு: தோனிக்கு பதிலாக தன்னை கேப்டன் ஆக்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் சண்டையிடும் ஓபிஎஸ்.

The post சி.எஸ்.கே அணி நிர்வாகத்திடம் தோனிக்கு பதில் தன்னை சென்னை அணி கேப்டனாக்குமாறு ஓபிஎஸ் சண்டை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: