முன்னதாக வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கோனில், கடந்த 17ம் தேதி 1 குவிண்டால் 1,280 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், நேற்று முன்தினம் 40.62 சதவீதம் உயர்ந்து 1,800 ரூபாயாக உயர்ந்தது.
இந்த நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படவில்லை; அது அமலில் உள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோருக்கு வெங்காயம் நியாயமான விலையில், போதுமான அளவு உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என ஒன்றிய அரசின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
The post வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு: ஒன்றிய அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.