தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் அதிவேக ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தீ வைப்பு தாக்குதலில் சில ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் சிக்னல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த தீ வைப்பு சம்பவங்களால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பாரிஸ் நகரை இணைக்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டன. பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் பாட்ரீஸ் வெர்கிரியேட்,‘‘ அட்லாண்டிக், நார்ட், எஸ்ட் ஆகிய ரயில் நிலையங்களின் அருகே தீ வைப்பு சம்பவங்கள் நிகந்துள்ளன. தண்டவாளத்தின் அருகே தீ எரிந்ததும் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
* இது நாசவேலை: பிரதமர் எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக பிரான்சின் அதிவேக ரயில் வலையமைப்பின் முக்கிய பகுதிகளைத் தாக்கியது நாசவேலையாகும். இதில் ஒரு தெளிவான நோக்கம் உள்ளது. அதில் பிரான்சின் அதிவேக ரயில் வலையமைப்பைத் தடுப்பது ஆகும் என்று பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறினார்.
The post ஒலிம்பிக் துவங்குவதற்கு முன் 3 தீ வைப்பு சம்பவங்கள் பிரான்சில் ரயில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.