தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,0000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் வினாடிக்கு 12,819 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீரிருப்பு 78.451 டிஎம்சியாக உள்ளது.