தமிழ்நாடு அரசின் இந்நடவடிக்கையைப் பாராட்டி எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் நன்றி பாராட்டும் விழா, இன்று மாலை சென்னை சைதாப்பேட்டையில் நடக்கிறது. அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் , துணைச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் 600க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொள்கின்றனர். பணியில் இருக்கும் செவிலியர்கள், செவிலிய மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க முடியாத நிலை தொடர்கிறது. எனவே, அவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், தபால் வாக்கு வழங்கிட, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை appeared first on Dinakaran.