கிணற்றுக்குள் சிக்கியுள்ள குட்டி யானை வெளியில் வர வழிதெரியாமல் தத்தளித்து வரும் நிலையில், ஆக்ரோஷம் அடைந்த தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை 8 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. ஜேசிபி இயந்திரங்களுடன் யானை குட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
The post நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு appeared first on Dinakaran.