இந்த தேர்வை, 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும் என்று அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த நிலையில், குரூப்-4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை நேற்று டிஎன்பிஎஸ்சி உயர்த்தியுள்ளது. அதாவது 480 எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இளநிலை உதவியாளர் பதவியில் 128 பணியிடங்களும், தட்டச்சர்-14, சுருக்கெழுத்து தட்டச்சர்-15, கணக்காளர்-1, உதவியாளர்-3, இளநிலை கணக்கு உதவியாளர்-8, வன பாதுகாவலர் மற்றும் வன காவலர்-70, பில் கலெக்டர்-47, உதவி விற்பனையாளர்-194 என 480 பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post அடுத்தமாதம் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்தியது டிஎன்பிஎஸ்சி: தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.