காரிமங்கலம், மே 23: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பெரியாம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காமராஜ் நகர் பகுதியில் குட்கா விற்பனை செய்த உஷா(57) என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
The post காரிமங்கலம் அருகே குட்கா விற்ற பெண் கைது appeared first on Dinakaran.
