தர்மபுரி, மே 23: மாரண்டஹள்ளி எஸ்ஐ தேவராஜன் மற்றும் போலீசார், மாரண்டஹள்ளி நான்கு ரோடு பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, டூவீலரை சோதனையிட்டனர். அதில், பெட்ரோல் டேங்க் கவரில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்ேகாட்டை பகுதியைச் சேர்ந்த சின்ராஜ்(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தியதாக சின்ராஜை கைது செய்த போலீசார், பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையிலடைத்தனர்.
The post மாரண்டஹள்ளியில் டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.
