- திருப்புத்தூர்
- தம்பிபட்டி சோழ வேளாளர் உறவின்முறை நலச் சங்கம்
- தென்மப்பட்டு
- திருப்புத்தூர், சிவகங்கை மாவட்டம்
- உரவின்முரை கணிதம்
திருப்புத்தூர், ஏப்.28: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி சோழிய வெள்ளாளர் உறவின்முறை நலச்சங்கத்தின் 51வது பொதுக்குழு கூட்டம் உறவின்முறை மடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டப் பதிவாளர் ஆணைப்படி, புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று தலைவராக தமிழ்மணி, துணைத் தலைவராக அரசுமணி, செயலாளராக செந்தில்பாண்டி, பொருளாளராக முத்துக்குமார், துணைச் செயலாளர்களாக சரவணன், செந்தில்நாரயணன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள் சார்பிலும் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
The post புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.
