×

ஏப்ரல் 25,26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 25,26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு அழைப்பாளராக மாநாட்டில் பங்கேற்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துவதாக பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பை மீறி துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியாக உள்ளார்.

The post ஏப்ரல் 25,26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vice-Chancellors' Conference ,Udaipur ,Governor ,Mansion ,Chennai ,Governor's Mansion ,Vice President ,Jagdeep Dhankhar ,Supreme Court ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...