அஞ்சுகிராமம், ஏப்.22: அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்பபுரத்தை சேர்ந்தவர் ராப்சன் ஜோஸ் (44). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் சிப்பி எடுப்பதற்காக பிராந்தனேரி குளத்தில் இறங்கியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வெளியில் வராததால் அவரது உறவினர்கள் பிராந்தனேரிகுளத்தில் தேடி பார்த்த போது இறந்த நிலையில் காணப்பட்டுள்ளாார். இது குறித்து அஞ்சுகிராமம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அஞ்சுகிராமம் அருகே சிப்பி எடுக்க இறங்கியவர் குளத்தில் மூழ்கி பலி appeared first on Dinakaran.
