×

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

 

பேரவை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து ஒரு விஷயம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அப்பாவுவிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்க்கட்சி தலைவருக்கு ேபச அனுமதி கொடுங்கள் என சத்தமாக பேசினர். அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, இன்று காலையில்தான் தீர்மான கடிதத்தை கொடுத்தீர்கள். அமைச்சர்கள் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் பரிசீலனையில் உள்ளது என்பதால் இப்போதே அதை எடுத்துக் கொள்ள முடியாது” என்று கூறினார்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பேச அனுமதி கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தியபடி இருந்தார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு மைக் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, வெளிநடப்பு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அனைவரும் வெளியேறினர்.

The post பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Leader of ,Opposition ,Edappadi Palaniswami ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...