சென்னை: அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு கல்வி, ஒற்றுமை, போராட்டமுமே நிரந்தவழி என முழங்கியவர். அறிவு சாட்டையை சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை. இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட அறிவித்தவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கல்வியை குலைத்து, மாணவர்கள் மத்தியில் பிற்போக்குத்தனத்தை நிலைநிறுத்தும் கனவுலகில் மிதந்தவர்களுக்கு அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் வழியில் பல்கலைக்கழகங்களை காப்பாற்றி இருக்கிறது தமிழ்நாடு அரசு. அவரது கருத்துகள் கற்றறிவதற்கு மட்டுமல்ல, கால சூழலுக்கு ஏற்ப களத்தில் செயல்படுத்தி வெற்றியடைவதும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு. அதற்கு அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் appeared first on Dinakaran.
