×

மரக்காணத்தில் ரூ.25 கோடியில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் (பாமக) பேசுகையில், ‘‘மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா” என்றார். இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை” என்றார்.

The post மரக்காணத்தில் ரூ.25 கோடியில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Tags : New International Bird Sanctuary ,Marakkanam ,Minister ,Ponmudi ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Mayilam ,MLA ,Sivakumar ,PMK ,Forest Minister ,Villupuram… ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...