×

இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடல் பகுதியில் சுமார் 2 கடல் மைல் தொலைவில், இலங்கை படகு எரிபொருள் இல்லாமல் நேற்று நின்றது. மரைன் போலீசார் விசாரித்ததில், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த பூலோக தாஸ், விமலேந்திரன் என்றும், கடந்த 15ம் தேதி யாழ்ப்பாணத்தில் இருந்து மீன்பிடிக்க வந்தவர்கள், திசை மாறி வந்தது தெரிய வந்தது. இரு மீனவர்களை கைது செ்ய்து, அவர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.

The post இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thondi ,Pasipattinam ,Ramanathapuram district ,Marine Police ,Phuloka Das ,Wimalendran ,Gurunagar ,Jaffna ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...