×

3 பேர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அவிநாசிபாளையம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி (75), இவருடைய மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) ஆகியோர் கடந்த நவம்பர் 28ம் தேதி கொல்லப்பட்டனர். 8 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியும் துப்பு துலக்க முடியவில்லை. இதனால் இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

 

The post 3 பேர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Tiruppur ,Deivasikamani ,Alamelu ,Senthilkumar ,Semalaikaundampalayam ,Avinashipalayam ,Palladam taluk ,Tiruppur district ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...