- ராமேஸ்வரம்
- மன்னார் நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
- ஜெயப்பிரகாஷ்
- முனியேந்திரன்
- சத்ய சதீஷ்
- மண்டபம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 17 பேருக்கு ரூ.12.50 லட்சம் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜெயபிரகாஷ், முனியேந்திரன், சத்திய சதிஷ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகுகளிலிருந்த 18 மீனவர்களை தனித்தனியாக கைது செய்திருந்தனர்.
மீனவர்கள் 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 17 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் அபராதம், ஒரு மீனவர் மட்டும் 2வது முறையாக சிறைப்பட்டிருந்ததால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதில் 17 மீனவர்கள் அபராத தொகை கட்டிய பின் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post 17 மீனவர்களுக்கு ரூ.12.50 லட்சம் அபராதம்: ஒருவருக்கு சிறை appeared first on Dinakaran.
