×

கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் எரிவாயு கிணறுகள் அமைக்க அறிவிக்கப்பட்ட பல்லுயிர் பகுதிகளை OALPலிருந்து நீக்கவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

The post கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Modi ,Gulf of Mannar ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...