×

86,000 பேருக்கு பட்டா கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசு 86,000 பேருக்கு பட்டா வழங்கு வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்: சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 57,000 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கவும் ஒட்டுமொத்தமாக 86,000 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிட தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ‘‘ஆட்சேபம் இல்லாத நிலங்களில் வசித்து வரும் 86 ஆயிரம் குடும்பங்களுக்கு, அடுத்த 6 மாதங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். ஆட்சேபனைக்குரிய இனங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் ஆய்வு குழுக்களை அமைக்க வேண்டும்.

The post 86,000 பேருக்கு பட்டா கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Patta ,Chennai ,Communist ,Tamil Nadu government ,State ,Shanmugam ,Chennai Corporation… ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...