×

பிரச்சனைகள் முடிந்து மீண்டும் துவங்கிய ‘கேப்டன் மில்லர்’

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

அப்போது படத்தின் படப்பிடிப்பில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வெடிகுண்டு காட்சிகள், புலிகள் சரணாலயத்தில் பாம் பிளாஸ்ட் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக நேற்று மத்தளம்பாறையில் பகுதியில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தென்காசி கலெக்டர் நிறுத்தினார். இன்று மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு அதே மத்தளம் பாறை பகுதியில் துவக்கியுள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் முடித்த பிறகு தான் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரச்சனைகள் முடிந்து மீண்டும் துவங்கிய ‘கேப்டன் மில்லர்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arun Matheswaran ,Dhanush ,Priyanka Mohan ,Shivraj Kumar ,Sandeep Kishan ,Nivedita Satish ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த...