×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு!


சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இன்று முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ. 115-ல் இருந்து ரூ. 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ, மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்த கட்டணம் மணி கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபாரி வாகன கட்டணம் ரூபாய் ஐம்பதிலிருந்து 150 ரூபாயாகவும், வீடியோ ஒலிப்பதிவு கட்டணம் ரூ. 500-ல் இருந்து 750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம் ஐந்து முதல் 12 மற்றும் 13 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமானது இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு, அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் கட்டண சலுகையாக ரூபாய் 20 மட்டும் வசூலிக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் ரூ. 200 வரை ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Chennai ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...