![]()
திருத்தணி: வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் என்ற ஜெயக்குமார்(39). இவர் தற்போது திருத்தணி காந்திரோடு இரண்டாவது தெருவில் வசித்து வந்தார். தனக்கு வேலை கிடைக்காததால் மனவேதனையில் இருந்த ஜெயக்குமார் கடந்த, 17ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஜெயக்குமாரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வேலை இல்லாததால் விஷம் குடித்தவர் பரிதாப சாவு appeared first on Dinakaran.
