டெல்லி: மக்களவையில் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் கொண்டு வந்துள்ளார். சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்ததை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவுரவ் கோகோய் கொண்டு வந்துள்ளார். மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று ஏற்கனவே 26 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது.
The post மக்களவையில் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்பு appeared first on Dinakaran.
