×

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 10: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரை சேர்ந்தவர் நல்லம்மை (68). இவர், திருச்சியிலுள்ள தனது மகள் வீட்டிற்கு கடந்த 11ம் தேதி சென்றுள்ளார். இந்நிலையில், இவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் வல்லமைக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்த போது, 8 கிராம் நகை, ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags : Srivilliputhur ,Nallammai ,Coonoor ,Trichy ,Vallamai ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்