புதுக்கோட்டை, மார்ச் 17: கோடை காலம் வந்தாலே மக்களின் நினைவில் முதலில் ஞாபகம் வருவது தர்பூசணி பழம் மட்டும் தான். தாகத்தை தணித்து, உடலை குளிர்விக்கும் இந்தப்பழம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோடை காலத்தில் விரும்பி உண்ணும் பிரபலமான பழமாக உள்ளது. சத்தும், சுவையும் நிறைந்த இந்தப்பழம் விவசாயிகளுக்கும் நல்ல வருவாயை தரக்கூடியதாகும். தர்பூசணியின் அறிவியல் பெயர் ‘சிட்ரல்லஸ் லாண்டஸ்’. இது ஆப்பிரிக்கா கண்டம், குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன.
