தஞ்சாவூர், மார்ச் 17: தஞ்சாவூர் மாவட்டம் துலுக்கம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பதனீர் இறக்க அனுமதி கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யை சந்தித்து கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே அமைந்துள்ளது இனாத்துக்கான்பட்டி ஊராட்சியை சேர்ந்தது துலுக்கம்பட்டி கிராமம். இங்கு சுமார் 550க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பதனீர் இறக்கும் தொழில் செய்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் பதனீர் இறக்காமல் கள் இறக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
