நெல்லையில் பேருந்துகள் சேவை தொடங்கியது; வெள்ளம் வடிந்ததால் சாலைகளில் போக்குவரத்து அனுமதி..!!

நெல்லை: நெல்லையில் பேருந்துகள் சேவை தொடங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்து சேவை தொடங்கியது. சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், வழியாக பேருந்துகள் பாபநாசம் செல்லும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி கல்லூரி சாலையில் நீர் முற்றிலுமாக வடிந்ததால் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடக்குப் புறவழிச்சாலையில் நீர் வடிந்து வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக இருந்த போதும் இன்னும் போக்குவரத்துக்கு அனுமதிக்கவில்லை. நெல்லை ஜங்ஷன் செல்லும் பேருந்துகள் வழக்கமான வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

The post நெல்லையில் பேருந்துகள் சேவை தொடங்கியது; வெள்ளம் வடிந்ததால் சாலைகளில் போக்குவரத்து அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: