நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச.31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச.31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச.31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: