இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்ப கட்டணத்தையும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஜூலை 10) வெளிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக நேற்று நடந்த விசாரணையில் ஒன்றிய அரசை சரமாரியாக கேள்விகள் கேட்ட உச்ச நீதிமன்றம், உரிய அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரி வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது. எனவே மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப்போவதால் இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளைய தினம் இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
The post நீட் தேர்வு குளறுபடி எதிரொலி பி.இ தரவரிசை பட்டியல் வெளியாவதில் சிக்கல்: மாணவர்கள் கவலை appeared first on Dinakaran.