வடசென்னை மாவட்டக்குழு சார்பில், இன்று காலை 10.30 மணிக்கு மூலக்கடை, யூகோ வங்கி முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு 10.30 மணிக்கு நடைபெறும் மறியலில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்கிறார். மத்திய சென்னை சார்பில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்ட செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்கின்றனர்.
The post மோடி அரசு அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம் appeared first on Dinakaran.
