கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த பறக்கும்படையினர் அமைச்சரின் காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் பறக்கும் படையினரிடம், உங்களது கடமையை செய்யுங்கள் என்று சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். காரில் அவரது உடைகள், குடிப்பதற்கு சில தண்ணீர் பாட்டில்கள் தவிர வேறு எதுவும் இல்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
The post அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை appeared first on Dinakaran.