இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டி.பி சத்திரம் போலீசார் விரைந்து வந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 9 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில், ‘’டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த சூர்யா(22) என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சென்னை பச்சையப்பன், வைஷ்ணவி கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபோது தட்டிக்கேட்ட அந்த பகுதியை சேர்ந்த ரவியை தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து 9 பேரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தனர்.
The post நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; ஒருவருக்கு அடி உதை: 9 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.