இந்த நிலையில், கொலையில் முக்கிய ஆதாரத்தை அழித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் ஷிலோம் ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்தூர் கூடுதல் போலீஸ் ஆணையர் ராஜேஷ் தண்டோட்டியா கூறுகையில்,‘‘தேவாஸ் நாகாவில் உள்ள ஒரு வீட்டை விஷால் சவுகானுக்கு ஜேம்ஸ் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் சோனம் தங்கியிருந்துள்ளார். சோனமிடம் இருந்த பை வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்தது. ஆனால், சோனமின் பையை ஜேம்ஸ் மறைத்து உள்ளார். இதையடுத்து அவரை மேகாலயா போலீசார் கைது செய்தனர்’’ என்றார்.
The post மேகாலயா ஹனிமூன் கொலையில் ஆதாரம் அழிப்பு; இந்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது appeared first on Dinakaran.
